Thursday, August 11, 2011

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்


ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``...இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.

காலை உணவு அவசியம்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது)பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்?

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.

உணவு என்றால்.....

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

இரும்புச் சத்து

பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

ஸ்லிம்மாக முடியும்

காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், "ஸ்லிம்"மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் "ஸ்லிம்"மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் "பி" ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.

நீண்ட வாழ்நாள்

காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.

எது நல்ல உணவு?

காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ருசிக்கு ருசி

காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

மாற்றக்கூடாது

சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடுவர்; சிலர் முழு உணவு சாப்பிடுவர். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால், இந்த பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது. மாற்றினால், உடலுக்கு பாதிப்பு தான் அதிகம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு... இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.
சரித்திரம்: இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.
இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்:
சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.
பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

சப்பாத்தி குருமா

தேவையானவை :
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
மஞ்சள்தூள்-ஒரு சிட்டிகை
உப்பு-தேவைக்கு ஏற்ப
கேரட்-100
பீன்ஸ்-100
உருளை-1
தாளிக்க :
எண்ணெய்-ஒரு தேக்கரண்டி
பட்டை,கிராம்பு,லவங்கம் -தலா ஒன்னு
கருவேப்பில்லை,கொத்தமல்லி-தேவைக​்கு
அரைக்க :
தேங்காய்-1 /2 மூடி
பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி
பூண்டு-5 பல்
இஞ்சி 1 அங்குல துண்டு

தேவையானவை :
அறைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும் .வெங்காயம்,தக்காளி, காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.அதில் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும்.பச்சை வாசனை போனதும் காய்களை சேர்க்கவும்.
இரண்டு தம்ளர் தண்ணீர் ,மஞ்சள்,மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைக்கவும்..குருமா சுண்டி வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூடான சப்பாத்திக்கு குருமா ரெடி...

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

ரசப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 தழை
கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.

* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.

* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.

* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.

* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.

குறிப்பு: சமைத்து முடிக்கும் வரை ரசத்தை கலக்கக் கூடாது.

வெள்ளாட்டுப் பால்!

வெள்ளாட்டுப் பால் இரத்தச்சோகை நோயையும், போன் டிமினரைசேசன் என்னும் எலும்பு வலுவிலத்து போகும் நோயையும் குணப்படுத்தக் கூடியது.

வெள்ளாட்டுப் பாலில் உள்ள இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் உடலில் எளிதில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பாரா தைராய்டு ஹார்மோன் நன்றாக வேலை செய்து உடலில் சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் தேவையை சரியாக வைத்திருக்க உதவு கிறது.

வெள்ளாட்டுப் பாலில் வைட்டமின்கள் தயாமின், ரிபோஃப் பிளேவின், நியாசின், பான்டோதீனிக் ஆசிட் மற்றும் ஏ.பி.ஈ.சி. விட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. வெள்ளாட்டுப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச்சத்து அதிகமாகவும் லாக்டோஸ் சத்து, குறைவாகவும் உள்ளது.

மனிதர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் கந்தகசத்தைக் கொண்ட (Methionine) மிதியோனைன் என்னும் அமினோ அமிலம், தாய்ப்பாலைவிட வெள்ளாட்டுப் பாலில் அதிகமாக உள்ளது.

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைவால் ஹைப்போ தெராமிசம் என்னும் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒபிசிடி என்னும் உடல் பருமனாதல், மாத விடாய் சீராக இல்லாத நிலைமை, குழந் தைச் செல்வம் பெற முடியாத நிலை போன்றவை ஏற்பட்டு, பெரும்பாலான பெண்கள் வேதனைப் படுகிறார் கள். இவற்றைப் போக்குவதற்கு வெள்ளாட்டுப்பால் சிறந்த அருமருந்தாகும்.

வெள்ளாட்டுப் பாலை பருகுவதால் மால் அப்சார்ப்சன் சின்ட்ரோம் நோய், உடல் பருமனாதல் நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் போன்றவை தடுக்கப்படுகின்றன.

நெடுந்தொடர் கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப்பாலில் உள்ளதால், இரத்தக் குழாய் களில் கொலஸ்டிரால் படிவதைத் தவிர்க் கிறது. இதன் காரணமாக ஆர்டிரியோ ஸ்லீரோசிஸ் என்னும் இரத்தக் குழாய்கள் சுருங்குவது தவிர்க்கப்படுவதால், இரத்த அழுத்த நோய் வராமல் வெள்ளாட்டுப்பால் உதவுகிறது. பித்தப்பையில் கற்கள் ஏற்படு வதையும் வெள்ளாட்டுப்பால் தடுக்கிறது.

வெள்ளாட்டுப் பாலில் உள்ள சில சத்துக்கள், புற்றுநோய் மற்றும் குடல் புண்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. வெள்ளாட்டுப் பாலில் பசும்பாலைவிடசோடியம் சத்து குறைவாக உள்ளதால் இதய நோய் உள்ளவர்களுக்கு, வெள் ளாட்டுப் பால் சிறந்த உணவாகும்.

இன்றைய நவநாகரிக உலகில் பெரும் பாலானவர்கள், இதய நோயால் அவ திப்படுகிறார்கள். பெண்களும் குழந்தைச் செல்வம் பெற முடியாமல் கஷ்டப்படு கிறார்கள். உடல் உழைப்பின்றி உட்கார்ந்தே பணிபுரியும் தகவல் தொழிலுநுட்பத் துறைப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், மன இறுக்கம் மற்றும் உடல் பருமனாதல் போன்றவற்றால் பாதிக்கப்படு கின்றனர். இவற்றைத் தவிர்க்க நாம் வெள்ளாட்டுப் பாலை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளாட்டுப் பாலை உற்பத்தி செய்வதற்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்:தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.


வெங்காயம்:வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிள்:இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.


அன்னாசி:இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.


எலுமிச்சம்பழம்:உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.


பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.



சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.



முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.

எளிய பாட்டி வைத்தியம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

*
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

*

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

*

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

*
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

*

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

*

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

*
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

*

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

*

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

*

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

*
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

*

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

*

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

*
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

*

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

*

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

*

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.


*

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

*

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

*

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.


*

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.


*

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.


*

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.


*

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

*

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

*
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

*

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

*

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

*

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.


மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.


1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.


குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

*

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.


*

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

எளிய பாட்டி வைத்தியம்

1. இருமல் தணிய தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு எள் உட்கொண்டு வந்தால் குணமாகும்.

*

2. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல், ஈளை, சீதக்கடுப்பு, புகையிருமல் ஆகியவை குணமாகும்.

கடுக்காயை வடகம் செய்து உட்கொண்டு வர வாந்தி, மூலம், வீக்கம், வயிற்றுவலி, சூலை, இரத்த சோகை முதலியன நீங்கும்.

பல்லில் ரத்தக் கசிவு உள்ளவர்கள் கடுக்காய், உப்பு, சீரகம் மூன்றையும் அரைத்து தினம் இருவேளை பல் துலக்க சுகம் பெறும்.

*

3. நிம்மதியான உறக்கம் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

*

4. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

*

5. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

*

6. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

*

7. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.


*

8. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

*

9. பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.

*

10. சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.

*

11. வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

*

12. சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.

படிகாரம், லவங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து அந்தத் தூளைக் கொண்டு காலையிலும், இரவிலும் பல் துலக்கி வந்தால் எவ்வகையான பல் வலியும் அகலும்.


*

13. ஈரல், பித்தப்பை, ரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள், நரம்பு மண்டலம் சரியாக இயங்காமை, ரத்த சோகை மற்றும் சில நோய்களைக் குணப்படுத்த திராட்சை பயன்படுத்தப்படுகிறது.

*

14. ரத்தம் சுத்தமடைய பசும்பாலில் உலர்ந்த அல்லது பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி, கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.

*

15. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும், பனைவெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

நூடுல்ஸ் விரும்பிகளே உஷார்!!!!

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

நூடுல்ஸ் விரும்பிகளே கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்…
*

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன் அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
*
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள்.
*
நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
*

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை.
*

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்

சிறுநீரகம் பழுதடைந்த நேயாளிக்கான உணவுகள்:

1. முதலில் உப்பை குறைக்கச் சொல்வர். அதனால் ஊறுகாய், காரம் அதிகமுள்ள துவையல் தவிர்க்கப்பட வேண்டும்.

*

2. கலோரிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் பொரித்த பண்டங்கள், அதிக நெய், சர்க்கரை சேர்க்கும் இனிப்புகள், கேக், பிஸ்கட், ஜாம், ஜெல்லி எல்லாவற்றையும் தவிர்க்கவேண்டும்.

*

3. கோகோ, சாக்லேட் எடுத்துக்கொள்ளக் கூடாது.

*

4. டின்னில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தக்காளி சாஸ், கெட்ச்_அப் முதல் ஸ்குவாஷ், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜூஸ், இளநீர் எல்லாவற்றிலும் சோடியம், பொட்டாசியம் அதிகம் இருக்குமென்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.

*

5. காய்கறிகளில் டாக்டர் குறிப்பிட்ட காய்கள் மட்டும் (நோயாளியின் உடல் நிலைக்கேற்ப) எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

*

6. பச்சைக் காற்கறிகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் வேக வைத்து தண்ணீரை வடித்து காய்கறிகளை உண்பது அவசியம். (வேக வைத்து தண்ணீரை வடித்துவிட்டால் பொட்டாசியம் தண்ணீரில் கரைந்து வந்துவிடும். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இந்தத் தண்ணீரை சமையலில் சேர்த்துக் கொள்ளவும். வீணாக்க வேண்டாம்.)

*

7. சிறுநீரகம் செயலிழப்புக்கு ஆளாகியிருக்கும் நோயாளிகள் மது, மாமிசம், சிகரெட் மூன்றையும் தொடாமலிருப்பது அவசியம்.

*

8. டாக்டரை உங்கள் தோழனாக நினைக்கவும். (அவருக்கென்ன, இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது என்று சுலபமாகக் கூறிவிடுவார். யாரால் அப்படியிருக்க முடியும்? _ இது எல்லா நோயாளிகளின் வாயிலிருந்தும் வரும் வார்த்தைகள்) நம் நல்லதிற்குத்தான் அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

வடை கறி

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 ( மீடியம் சைஸ் )
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு, பட்டை - 3,2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க மட்டும்
செய்முறை:
1. முதலில் பருப்பை 1.1/2 மணி நேரம் ஊறவிட்டு ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
2. அதை சிறு சிறு உருண்டைகலாக உருட்டி ஆவியில் வேக விடவும். பிறகு அதை உதுத்து விடவும்.
3. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரித்ததும் இடித்த இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. பிறகு மஞ்சத்தூள், உப்பு, காரம் தேவை எனில் மிளகு தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
5. கொதித்ததும் உதித்து வைத்துள்ள பருப்பை ( ஆவியில் வேக வைத்தது ) போட்டு கொதிக்க விடவும்.
6. கொத்த ம‌ல்லி போட்டு இற‌க்க‌வும். சுவையான வடை கறி தயார் .

புதுவை பகுதியில் செய்யும் பிரியானியோடு சேர்ந்து சாப்பிடும் தித்திப்பு தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :
தக்காளி  : அரை கிலோ
பேரிட்சை பழம்  200  கிராம்
நெய் : 50 கிராம்
முந்திரி : 100 கிராம்
திராட்சை : 100 கிராம்
ஏலக்காய் தூள் : அரை தேக்கரண்டி
எண்ணெய் : தேவையான அளவு
சர்க்கரை : 400 கிராம்

செய்முறை :
 ஒரு வாணலில் எண்ணெய் விட்டு பேரிட்சை பழத்தை வதக்கவும் , நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும் , நன்கு வதங்கிய பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் , சிறிது நெய் சேர்த்து கிளறவும் , வேறு ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி வறுக்கவும் அதனோடு திராட்சை சேர்த்து வதக்கவும் , இதனை தக்காளி பேரிட்சையுடன் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும் . இனிப்பான தக்காளி சட்னி தயார் .

மாங்காய் எள்ளு துவையல்

தேவையான பொருட்கள் :
மாங்காய்
வெள்ளை எள்ளு :100 கிராம்
உளுத்தம் பருப்பு : 50 கிராம்
கடலை பருப்பு : 50 கிராம்
வெந்தயம் : ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் : 3
தேவையான அளவு கல் உப்பு

செய்முறை :
வாணலில் வெள்ளை எள்ளை வறுத்து எடுத்து கொள்ளவும் , வெந்தயத்தையும் வறுத்து எடுத்து கொள்ளவும் ,
கடலை பருப்பு வறுத்து எடுத்து கொள்ளவும் , உளுத்தம் பருப்பையும் வறுத்து எடுத்து கொள்ளவும் , காய்ந்த மிளகாய் வறுத்து எடுத்து கொள்ளவும் , மாங்காவை தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும் , முதலில் வருத்த அனைத்து பொருளையும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் , பின்பு மாங்காய் சேர்த்து அரைக்கவும் , நீர் விட்டு அரைக்க கூடாது , இப்போது சுவையான
மாங்காய் எள்ளு துவையல் தயார் .

வெள்ளரி மோர் குழம்பு

தேவையான பொருட்கள் :
வெள்ளரி காய்  : அரை கிலோ
 பெரிய வெங்காயம் : முன்று
தக்காளி   : நான்கு
பச்சை மிளகாய் : காரதிற்க்கேற்ப
கருவேப்பிலை : தாளிக்க தேவையான அளவு
கொத்த மல்லி :  கார்னிஷ் செய்ய தேவையான அளவு
எண்ணெய் : தாளிப்பதற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு : தேவையான அளவு
தயிர் : 250 மில்லி
தேங்காய் : அரை முடி
சீரகம் : ஒரு தேக்கரண்டி
வெந்தயம் : ஒரு தேக்கரண்டி
பூண்டு : நாலு பல்
மஞ்சள் தூள் : ஒரு தேக்கரண்டி
புளி : நெல்லிக்காய்  அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

அரைக்க வேண்டியவை :
மிக்ஸியில் தேங்காய் , சீரகம் , வெந்தயம் , புளி கரைச்சல் , பூண்டு , பச்சை மிளகாய் , மஞ்சள் தூள் இவைகளை அரைத்து எடுத்துகொள்ளவும் .

தாளித்து செய்ய  :
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு , கருவேப்பிலை , பச்சை மிளகாய் , தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கவும் , அதனோடு வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து வேகவிடவும்,நீர் சுண்டி முக்கால் பதம் வெந்தததும் , அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் , மோர் சேர்த்து கொதிக்க விடவும் ,  உப்பு ருசிகேற்ப சேர்க்கவும் , ருசி பார்த்து இறக்கி கொத்த மல்லி கார்னிஷ் செய்து பரிமாறவும் சுவையான வெள்ளரி மோர் குழம்பு தயார் .

நவதானிய தோசை

தேவையானப் பொருட்கள்:
பாசிப்பயறு                    ​                            = கால் கப்,
கருப்பு உளுத்தம்பருப்பு               ​          =கால் கப்,
கொண்டைக்கடலை                               = கால் கப்,
பச்சரிசி                      ​                                 = கால் கப்,
துவரம்பருப்பு                 ​                           =கால் கப்,
கொள்ளு                        ​                             = கால் கப்,
சோயா                          ​                              =கால் கப்,
வெள்ளை சோளம்                         ​         =கால் கப்,
எள்ளு                         ​                              ​   = ஒரு டேபிள்ஸ்பூன்,
 பச்சை மிளகாய்                       ​                =3,
காய்ந்த மிளகாய்                       ​              = 6,
இஞ்சி                         ​                              ​   =ஒரு துண்டு,
தேங்காய் துருவல்                       ​           =ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை                                         =சிறிது,
பெருங்காயத்தூள்               ​                    =அரை டீஸ்பூன்,
உப்பு                         ​                              ​     =தேவையான அளவு,
எண்ணெய்                       ​                         =தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி  =சிறிதளவு.


செய்முறை:
எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

சத்தான பயிர் உருண்டை

தேவையான பொருட்கள் :
முந்திரி பயிர்             : 50 கிராம்
பொட்டு கடலை        : 50 கிராம்
கடலை பயிறு           : 50 கிராம்
பாசி பயறு                  : 50 கிராம்
உளுத்தம் பயிறு       : 50 கிராம்
நெய்                             : 200 கிராம்
சர்க்கரை                    : 250 கிராம்

செய் முறை :
முந்திரி பயிர்  , பொட்டு கடலை , பாசி பயறு , உளுத்தம் பயறு , கடலை பயறு இவை அனைத்தையுமே தனித்தனியாக வாணலில் வறுக்கவும் , தீயாமல் வறுக்கவும் . அதனை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும் , அதனோடு சர்க்கரையும் சேர்த்து அரைக்கவும் , அரைத்த பின் தட்டில் கொட்டி வைக்கவும் .
நெய் சூடு படுத்தி அரைத்த மாவில் சிறிது சிறிதாக விட்டு உருண்டை பிடிக்கவும் , சத்தான பயிர் உருண்டை தயார் .

ஜவ்வரிசி மோர் உப்புமா

 தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 150 கிராம்
மோர் - ஒரு கப்
மோர் மிளகாய் - 3
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை :

ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதில் மோரை ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு மோருடன் ஊற வைத்த ஜவ்வரிசியை தாளித்தவற்றுடன் போட்டு நன்கு எல்லாம் ஒன்றாகும்படி கிளறி விடவும்.
பின்னர் பொரித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை பொடி செய்து உப்புமாவில் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்கவும்.
4 நிமிடம் கழித்து உப்புமா வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு பொலபொலவென்று ஆனதும் இறக்கி வைத்து விடவும். ஜவ்வரிசி ரொம்ப கெட்டியாக இருந்தால் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைத்து வெந்ததும் இறக்கவும்.
ஜவ்வரிசி மோர் உப்புமா தயார். நாம் வழக்கமாக செய்யும் உப்புமாவை விட செய்முறையிலும் ருசியிலும் சற்று வித்தியாசமானது. இதனை நைலான் ஜவ்வரிசியை வைத்து செய்யவும்.

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள் :

பனீர் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
குடை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 2 கொத்து
வெண்ணெய் - 100 கிராம்
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 2 கப்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.


மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கி அதில் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.


பிறகு இஞ்சி, பூண்டு, விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.


பின்னர் தக்காளி விழுதை ஊற்றி 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.


அதில் சீரகத் தூள், கொத்தமல்லி தூள் போட்டு கிளறவும். அதனுடன் மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து, வதக்கிய குடை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.


பிறகு பொரித்து வைத்துள்ள பனீர் துண்டங்களை போட்டு ஒரு நிமிடம் கிளறிவிட்டு வேகவிடவும்.


அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.


கொதித்ததும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மேலே ஊற்றி ஒரு தேக்கரண்டி வெல்லத் தூள் போட்டு கிளறவும். பிறகு கொத்தமல்லி தழை மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தூள் போட்டு மூடி விடவும்.


இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து பிறகு இறக்கவும். சூடாக பரிமாறவும். நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான பக்க உணவு இது

தயிர் ராகி சேமியா

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு   சேமியா : 250  கிராம்
எண்ணெய்                  : தளிக்க தேவையான அளவு
கடுகு                         ​   : தேவையான அளவு
உளுத்தம்பருப்பு       : தேவையான அளவு
தயிர்                         ​   : 150 மில்லி
பச்சை மிளகாய்       : காரத்திற்கு ஏற்ப
தேங்காய்                   : அரை முடி
முந்திரி                      : 10 நம்பர்
கொத்த மல்லி         : இரண்டு இணுக்கு
உப்பு                         ​  : தேவையான அளவு

செய்முறை :

கேழ்வரகு   சேமியாவை நீர் விட்டு அவித்து கொள்ளவும் , அவிததை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ,வாணலில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்து சேமியாவில் இடவும்.
தேங்காய் , பச்சை மிளகாய்  , முந்திரி பருப்பு சிறிது தயிர் விட்டு மிக்சியில் அரைக்கவும் , அரைத்ததை சேமியாவுடன் சேர்த்து மிதமுள்ள தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து , கொத்த மல்லி கார்னிஷ் செய்தால் சுவையான தயிர் ராகி சேமியா ரெடி .

சின்ன வெங்காய சட்னி

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம்  -அரை கிலோ
நெய்                          ​   -100 கிராம்
காஞ்ச மிளகாய்       - காரத்திற்கு ஏற்ப
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை    - தேவையான அளவு
புளி                          ​   - 150  கிராம்
உப்பு                         ​  - தேவையான அளவு

செய்முறை :
                 வாணலில் நெய்விட்டு  கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, காஞ்ச மிளகாய் , தாளித்து வறுக்கவும் , அதனோடு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் , நன்கு வதங்கியவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும் அதனோடு புளி கரைச்சலை சேர்த்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் , சுவையான சின்ன வெங்காய சட்னி தயார் .

வெண் பொங்கல் பிரசாதம் .

தேவையான பொருட்கள் :

அரிசி                        : 400 கிராம்
பயத்தம் பருப்பு     :100 கிராம்
மிளகு                      : 25 கிராம்
சீரகம்                       : 10 கிராம்
கொஞ்சம் இஞ்சி
முந்திரி பருப்பு     :100 கிராம்
நெய்                        : 100 கிராம்
உப்பு                        : தேவையான அளவு
கருவேப்பிலை    : ஒரு கொத்து
செய்முறை :

அரிசி பயத்தம் பருப்பு ஒரு பாத்திரத்தில் களைந்து , ஒரு கோப்பையில் அளந்து குக்கரில் இடவும் , இதே அளவில் முன்று படங்கு தண்ணீர் சேர்த்து உப்பிட்டு நான்கு விசில் வரை வேகவிடவும் .

ஒரு வாணலில் நெய் விட்டு கருவேப்பிலை முந்திரி மிளகு சீரகம் வறுக்கவும் , வருத்த பின் வேறு பாத்திரத்தில் மாற்றி இஞ்சி சேர்த்து வைக்கவும் , அதனை வெந்

டயட் பேட்டீஸ்

தேவையான பொருள்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்,
நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
பட்டாணி - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட்- 1/2 கப்,
கோதுமை பிரட் - 6 ஸ்லைஸ்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - 1கப்,
உப்பு, ஆலிவ் ஆயில் - தேவைக்கேற்ப,
பிளாக்ஸ் சீட்ஸ் (flax seeds) (ராகி நிறத்தில் அரிசி போல இருக்கும்) இலேசாக வறுத்துப் பொடித்தது - 1 கப்.
செய்முறை:
வாணலியில் ஆலிவ் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், நறுக்கிய காய்களைச் சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு சேர்த்து, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். வெதுவெதுப்பான நீரில் பிரட் ஸ்லைஸ்களை நனைத்து, ஒட்டப்பிழிந்து காய்கறிக் கலவை-யுடன் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இந்தக் காய்கறிக் கலவையை எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவங்களில் (தட்டை / உருண்டை) செய்து கொள்ளவும். பொடித்து வைத்துள்ள flax seedsல் புரட்டி, நான்ஸ்டிக் தவாவில் ஃப்ரை செய்யவும். தேவைப்பட்டால் சிறிது ஆலிவ் ஆயிலை விடவும். கெட்சப் அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலிவ் ஆயில் ‘ஜீரோ கொலஸ்ட்ரால்’ தன்மை கொண்டது. ஃபிளாக் விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பாதாம் பற்றி ஒரு ஆய்வு .

பாதாம் ஒரு உயர்தர சூப்பர் உணவு. அனைவருக்கும் பிடித்தது. சத்து நிறைந்தது. பாதாம் நமது தேசத்தில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் விளைகின்றது.
மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாமை விற்பனை செய்கின்றன.
பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம் – இதன் பூக்கள் மென்மையாக இருக்கும்.
இரண்டாவது வகை கசப்பு பாதாம் – இதன் இலைகள் சிவப்பு கலரில் இருக்கும். இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெய்யே பயன்படுத்தப்படுகின்றனது.
பாதாமில் உள்ள சத்துக்கள்
பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.
பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.
ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
பாதாமின் பயன்கள்
பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில்  நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது.  உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.
பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.
ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
வசதிக்கேற்ப  மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
பூண்டு – 10 பல் (பொடியாக வெட்டவும்)
புளி – 50 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3, நீளமாக வெட்டவும்


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும். அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும். இந்த குழம்பு படுகாரமாக இருக்கும். கவுச்சி நாற்றம் இருக்காது.

குறிப்பு: இந்த குழம்புக்கு மூடியை நடுவில் திறக்கலாம். ஏன் என்றால் மிளகாய்த்தூள் எண்ணெயில் வதக்குவதால் பச்சைவாடை வராது. மீன், புளி கரைசலையும் ஒன்றாகத்தான் போட வேண்டும்.