Saturday, March 9, 2013

உண்ணாவிரத மாணவர்கள்


கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் - உண்ணாவிரத மாணவர்கள் .
09 03 2013


தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய அரசு குழப்பமற்ற ஒரு தெளிவான தீர்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிய வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட மாணவர்கள் லயோலா கல்லூரி அருகில் நேற்றைய தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதம் இருந்தனர்.

பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை காவல்துறை இலங்கை துதரகம் அருகைமையில் உண்ணாவிரதம் நடப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கு தொடர்ந்து நடத்த அனுமதி மறுத்த நிலையில் தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.


இரண்டாவது நாளான இன்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் பேசுகையில் எமது கேரிக்கை நிறைவேற்றும் வரை தாம் போரடபோவதகவும் அப்படி போராடும் பச்சத்தில் தாம் இறந்தால் தங்களது உடலை மாணவர்கள் கையில் எடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போரடவேண்டும் என்று கூறியுள்ளனர் .

இவ் ஆர்பட்டதிற்கு பழ நெடுமாறன் ,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேலும் பல சமுக ஆவலர்கள் , மாணவர்கள் , உணர்வாளர்கள் , வணிகர் சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கொண்டு உள்ளனர்.
லயாலோ கல்லூரி மாணவர்கள் நடத்தும்
பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ ,
பணத்திற்காகவோ இல்லை .. அவர்களிடம் இருக்கும்
தமிழின உணர்வில்
கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..
அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள்
ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில்
இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும்
போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?
இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்
கொண்டும் , ஈழ தமிழர்கள்
சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான்
இருப்பார்கள் ..