Tuesday, March 13, 2012

மது உடலுக்குக் கேடு !

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.இது பற்றி இந்த இடுகையிலே முன்பு பதிவிட்டிருந்தேன்.
இந்த இடுகையிலே சற்று விரிவாக மதுவினால் ஈரல் பாதிக்கப் படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சடுதியாக மரணங்கள்
ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்…
வயிற்று வலி
உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
அதிகமான தாகம்
தொடர்ச்சியான காய்ச்சல்
உடல் பலவீனம்
வயிற்று வீக்கம்
கண் மஞ்சள் நிறமடைதல்
பசி குறைதல்
வாந்தி வருகின்ற உணர்வு
உடல் நிறை திடீரென அதிகரித்தல்
கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
ரத்த வாந்தி எடுத்தல்
ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. ]

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
 

No comments: