Sunday, September 25, 2011

அம்மா !!!




அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்

அம்மா – தங்கை
அம்மா – மகள்
அம்மா – பேத்தி
அம்மா – வேலைக்காரி
அம்மா – தாய்
அம்மா – எஜமானி
அம்மா – நண்பரின் தாய்
அம்மா – கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா – காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா – நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா – பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா – அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா – தமிழ் (தமிழன்னை)
அம்மா – தெய்வம்
அம்மா – மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா – துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா – வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா – கலைஞரின் எதிர் இருக்கை
அம்மா – மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா – பெண்கள்
அம்மா – தாய்க்குலம்

இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!

எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான் சரி.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!

தமிழில் பெயரிடுங்கள்



 தாய்மொழியை ஒதுக்கி வைத்து பிறநாட்டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொள நினைத்தல்

தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்.
வாய்மணக்கும் தமிழில் பெய ரிடுவதாலே
வாய்வெந்து போய்விடுமா ? இட்டால் என்ன ?
குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண் கட்கெல்லாம்
அன்னலென்றும் அன்றிலென்றும் அல்லி யென்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண் டிற்கெல்லாம்
மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின்
மின்னி யென்றும் பெயரிடலாம் தமிழரெல்லாம்
என்றுமுள செந்தமிழில் பெயரி டாமல்
இரவல் மொழிப் பெயரிடுதல் அடிமைத் தனம்.
 - உவமைக் கவிஞர் சுரதா

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...!


சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...

சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.

அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். 

சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.

பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.

அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.

இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.

தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் பிறந்த ஆண்டின் இறுதி இரண்டு இலக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வயதை அத்துடன் கூட்டுங்கள் 111 ஆக இருக்கும். உலகிலுள்ள அனைவருக்கும் 111 ஆகத்தான் இருக்கும்,

எதிர்பார்ப்பதை கூகிளால் தேடித்தரமுடியவில்லையா? மாற்று தேடு பொறிகள் சில.


நிச்சயம் கூகிள் உலகின் சிறந்த தேடுபொறி என்பதில் சந்தேகமில்லை. எனினும் சில நேரங்களில் உங்களுக்கு
தேவையானதை கூகிளால் தேடி தரமுடியவில்லையென்றால்? 

கூகிளுடன் போட்டி போடும் குறிப்பிட்ட விடயங்களை மட்டும் தேடித்தரும் ஏனைய பவர்வுல் சர்ச் எஞ்சின்களை முயற்சியுங்கள்.

DuckDuckGo 

முழுதுமையாக அனானியாகவே இணையத்தில் தேடலாம். அத்துடன்  குறிப்பிட்ட புரோகிராமிங்க் நிரலிகள் , இணையத்தளங்களை உடனே தேடித் தரவல்லது. 

இணைப்பு https://duckduckgo.com/?q=&t=i

blekko.com

இணையத் தேடலில் விளம்பரங்களை தடைசெய்து உண்மையான விடயங்களை மட்டும் தரக்கூடியது.

Wolfram Alpha
கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.

எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.

இணைப்பு http://www.wolframalpha.com/

Bing
யாஹூ , கூகிளை விரும்பாதவர்கள் உடனே செல்வது இங்குதான் எனினும் கூகிளைப் போலவே இதனது தேடுதல்களும் இருக்கிறதென்பது பொதுவான கருத்து.




'காதல்'-ங்குற ஒரு மேட்டர்ல மாட்டிக்கிட்டு அல்லோல்படும் ஆண்களே...!காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில...


காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு இருக்குமா. என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!


மது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* www.zedge.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.netஎன்று டைப் செய்து இணையலாம்.

* www.gallery.mobile9.com
நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com     
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

* http://www.apniapps.com
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

* http://www.ipmart-forum.com/
இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை  கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

* http://www.youpark.com
ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

யாரையும் கண்முடித்தனமாக பின்பற்றாதீர்கள்.


ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் மிதப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் மிதக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.
துறவி ஒவ்வொருநாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீரடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லிதருமாறு கேட்டனர். 

அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்று தருவதாக சொன்னார், அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது ஏன் அவனால் முடியவில்லை என கேட்டார்கள்.
அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன். என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன், அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்துசென்றுவிட்டது என்றார். 

இக் கதையின் நீதி  :  யாரையும் கண்முடித்தனமாக பின்பற்றாதீர்கள்.

இணையம் என்னும் வசியக்காரன்….ஒரு பகீர் ரிப்போர்ட்!



இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்? கேள்விக்கு விடையை கொடுக்க அவரவரின் மனோநிலைதான் முடியுமென்றாலும் கழுகு தனது சிறகடிப்பில் கண்டறிந்த விடயங்களை இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்…!

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..
இண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன?
இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.

Types of internet addiction:
1. Always want to open any kind of websites
2. chat rooms
3 .Interactive games
4. Database search engine
5. Pornography
6. cybersex

சரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு பின்பு தொடருங்கள்.
1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன் ஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான் உங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா?
3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா?
4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ, restless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா?
5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட நேரத்தை விட தற்பொழுது, அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா?
6.இப்படிச் செய்வதால், நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ, இல்லை.. வேலை, படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா?
7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை உங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா?
8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா?
மேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.
Matrimoniyal lawyers சொல்கிறார்கள், தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ வயதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.

இத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல் ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பிறந்த நாள் விழாக்களில் பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.
பள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல், மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், நான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர், தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும் எடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.
இது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்றஅதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
சரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ, பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை. சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது, அதாவது 85% மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால், பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை. அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..
 
சரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால், முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைமுறைகளைப் பெற வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..

நாம் இந்தியர்' என பெருமை கொள்ள வைக்கும் சாதனைகள்:-


* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.
* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.
* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.
* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.
* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, 
"போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.
* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை 
சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...


இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

இந்தத் தேடல் பொறியை உபயோகப்படுத்துங்கள்..


இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com
இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.