Friday, August 12, 2011

ஆட்டு எலும்பு சூப்

ஆட்டு எலும்பு கால் கிலோ
வெங்காயம் இரண்டு
மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு 6
பட்டை இரண்டு துண்டுகள்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

• ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
• நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
• தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும். இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
• எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.
• பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
• சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் அருந்தவும்.

No comments: