Friday, August 12, 2011

பூசணிக்காய்

‎''புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்''

பூசணிக்காய்க்கு புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்தும் உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன.பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

மலேஷியா பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பத் துறை பேராசிரியை நூர் அஜியா அப்துல்அஜீஸ் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டார். புற்றுநோய் தொடர்பான அவர் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பூசணிக்காய்க்கு புற்று நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது. பூசணிக்காயில் ஒருவித`ஸ்டார்ச்' உள்ளது. இந்த ஸ்டார்ச்சுகள் `புரொப்பி யோனிக்' அமிலத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த அமிலம் காரணமாக பூசணிக்காயில் உள்ள `ஸ்டார்ச்' புற்றுநோயை உருவாக்கும் செல்கள் பலவீனப்படுத்து கின்றன. தீமை தரும் பாக்டீரியாக்களும் அழிந்து விடுகின்றன.

பூசணிக்காயின் சதைப் பகுதியை மாவாக்கி உலர்த்தி யும் பயன்படுத்தலாம். இதன்மூலமும் புற்றுநோயை குண மாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

No comments: