Monday, August 1, 2011

தோசை

தேவையான பொருள்கள்:-
புழுங்கல் அரிசி – 1/2 லிட்டர்
பச்சரிசி – 1/2 லிட்டர்
உளுந்து – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கொஞ்சம்

செய்முறை:-
முதல் நாள் மாலையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஊற வைக்கவும்.
உப்புப் போட்டு, கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவும்.
அடுத்த நாள் காலை மாவு நன்றாகக் புளித்திருக்கும்.
மாவில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, எண்ணெய் தோய்த்த ஒரு துணியினால் கல்லைத் துடைத்து விட்டு, ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வட்டமாகப் பரப்பி விடுங்கள்.
ஒரு புறம் வெந்ததும், தோசைக் கரண்டியால் திருப்பிப் போட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை நன்றாக வெந்ததும், எடுத்துத் தட்டில் போடவும்.
சுடச் சுட சாம்பார் ஊற்றியோ, சட்னி தொட்டுக் கொண்டோ அல்லது இரண்டும் வைத்துக் கொண்டோ தோசையை ஆசையோடு சாப்பிடுங்கள்.

No comments: