Friday, March 8, 2013

வீரமங்கை வேலு நாச்சியார்

உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.

வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.

வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...

மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்



thanks to iyappan gp
புகைப்படம்: உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!  வீரமங்கை வேலு நாச்சியார்  வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.  வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.  வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...   மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்

எண்ணத்தில் நீ வெறும் மலடெ

இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !

இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !

இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !

இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !

சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !

- Divya Dharshini
புகைப்படம்: இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !  இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !  இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !  இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !  சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !  - Divya Dharshini

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்....

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....


(மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்....)



by: Harini Nagaraj
 - Nithya Srinivasan Mohan Thiya

Thursday, February 28, 2013

தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!


தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.
தமிழன் சாதித்த கட்டிடக்கலை.!!!

தமிழ்ச்சித்தர்களின் என்றுமழியாக் கட்டிடக்கலை..!

தமிழ்ச்சித்தர்களின் கட்டடக்கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும், இராச ராச சோழ மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

#தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.

Friday, August 3, 2012

Radio Hello 89.5 FM ( UAE ) இப்பொழுது எண் வலைப்பக்கத்தில்


அனைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . சரி நண்பர்களே இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம் . முதலில் அமீரகத்தில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் சில புதுமையானத் தகவல்களை பற்றி நாம் அறிந்துகொள்ளலாம் .

அமீரகத்தில் என்னதான் வெயிலின் கொடுமை அதிகம் இருந்தாலும் இந்த Radio Hello 89.5 FM DUBAI வானொலி அதுதாங்க ரேடியோ வருகையினால் இப்பொழுது ஒவ்வொருவரின் களைப்பிலும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொளுத்தும் வெயிலிலும் அமீரகத்தில் ஒரு அடைமழை இந்த Radio Hello 89.5 FM ( UAE ) வானொலி என்பது உண்மை ,. இதுவரை அறியாதவர்கள் இப்பொழுதேக் கேட்டு மகிழுங்கள் 





 இப்பொழுது எண் வலைப்பக்கத்தில் 



http://www.facebook.com/radio895fm?sk=wall

https://www.facebook.com/rj.suresh.7?ref=ts

http://scrawls.wordpress.com/tag/hello-fm/  
   reva wordpress
  
https://www.facebook.com/rj.natraj?ref=ts                         



நண்றி.பனித்துளி சங்கர் & மர திரைப்படம்,ரேடியோ ஹலோ
                            

Tuesday, March 13, 2012

மது உடலுக்குக் கேடு !

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.இது பற்றி இந்த இடுகையிலே முன்பு பதிவிட்டிருந்தேன்.
இந்த இடுகையிலே சற்று விரிவாக மதுவினால் ஈரல் பாதிக்கப் படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சடுதியாக மரணங்கள்
ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்…
வயிற்று வலி
உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
அதிகமான தாகம்
தொடர்ச்சியான காய்ச்சல்
உடல் பலவீனம்
வயிற்று வீக்கம்
கண் மஞ்சள் நிறமடைதல்
பசி குறைதல்
வாந்தி வருகின்ற உணர்வு
உடல் நிறை திடீரென அதிகரித்தல்
கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
ரத்த வாந்தி எடுத்தல்
ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. ]

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
 

நாராயணன் கிருஷ்ணன்

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!