உலக மகளிர் தினம் நல்வாழ்த்துகள்...!
வீரமங்கை வேலு நாச்சியார்
வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.
வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.
வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...
மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்
thanks to iyappan gp
வீரமங்கை வேலு நாச்சியார்
வீரமங்கை வேலு நாச்சியார் அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து விடுவார். மறவர் படைக்கு கொடுக்கிற போர்ப் பயிற்சிகளைப் பார்வையிடுவார். தான் ஏற்படுத்திய உடையாள் படை என்ற பெண்களின் படைக்குப் போர்ப் பயிற்சி அளிப்பார். அவர்கள் வளரியை எப்படி லாவகமாக வீசுவது என்பது பற்றியும் விளக்கமாக விவரிப்பார். அச்சீமையில் உள்ள புரட்சியாளர்களுக்கு ஓலை அனுப்புவார். நேரில் வந்து பேசுகிற கிளர்ச்சி தலைவர்களுடன் பகைவர் படையின் பலம் பலவீனம் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். விடுதலையை விரும்பிய வீரர்கள், உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் வேலு நாச்சியாரின் பக்கம் வந்து சேர்ந்தனர். விடுதலைப் படைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக வளர்ந்தது.
வேலு நாச்சியார் வெள்ளையர்களை வீழ்ந்த 30000 வீர நங்கையர்களாகிய பெண்கள் படையைத் திரட்டி அதனை இரு அணிகளாக வகுத்து ஒன்று வீரப்படை, மற்றொன்று சோரப்படை என்று பெயர் சூட்டி, அப்படைகளில் ஒரு அணிக்குத் தாமே தலைமை தாங்கி ஆங்கிலப் பரங்கியர் படைகளோடு ஆவேசத்தோடு போர்புரிந்தார்.
வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைந்து தளபதி பான்ஜோர் படையைச் சந்திக்க முடிவு செய்தனர். விஜயதசமி, நவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் உள்ள இராஜ ராஜேஸ்வரியை வணங்க முன்வாயில் திறந்து விடப்பட்டது. வேலு நாச்சியாரும் அவரது பெண்கள் படையும் மாறுவேடத்தில் பொது மக்களோடு கலந்து கோவிலுக்குள் புகுந்தனர். திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற பெண் தம் உடம்பெல்லாம் நெய்யூற்றி தீ வைத்தபடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்தாள். குயிலியோடு கும்பினியரின் அனைத்து ஆயுதங்களும் எரிந்து சாம்பலாயின. விடுதலைப் படையை எதிர்கொள்ள இயலாமல் வெள்ளையர் படை விழி பிதுங்கியது. இதற்கிடையில் பான்ஜோரை வேலு நாச்சியார் நேர்கொண்டார். அவனது துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பத் தூணில் மறைத்து வேலு நாச்சியார் வித்தை காட்டினார். குண்டுகள் தீர்ந்ததும் பான்ஜோரும் வாள் ஏந்தினாள். இதற்காகவே காத்திருந்தது போல் வேலு நாச்சியார் ஒரு சில விநாடிகளில் பான்ஜோரை மண்டியிடச் செய்தார். தனது கணவனைக் கொன்றவரைத் தோற்கடித்தபின் அவரின் உயிரை பறிக்க விரும்பவில்லை. இந்தச் சாகசங்களை அவர் செய்தபோது வயது ஐம்பது. இவ்வளவு வீரமிக்க பெண் முற்காலத்தில் பிறந்ததும் இல்லை ...இனி பிறக்க போவதும் இல்லை ...
மாதர் குல மணிவிளக்குகளே உங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்.அனைத்து மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்
thanks to iyappan gp
No comments:
Post a Comment