Friday, March 8, 2013

எண்ணத்தில் நீ வெறும் மலடெ

இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !

இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !

இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !

இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !

சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !

- Divya Dharshini
புகைப்படம்: இனிப்பாக இருந்தது என் ஜாதியை எனக்குள் எண்ணிப் பார்த்துப் பெருமைப் படும்போது !  இறுமாப்பாய் இருந்தது என் ஜாதிப் பெருமையை என் தந்தையோடு பகிர்ந்து கொள்ளும்போது !  இதமாக இருந்தது என் ஜாதிக்காரர்கள் எங்கள் ஊரில் இவ்வளவு நெருக்கமாக என் உறவாய் இருப்பதைப் பார்க்கும்போது !  இன்னும் கொஞ்சம் கர்வமாய்க் கூட இருந்தது இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் என் ஜாதிக்காரர்கள் இத்தனை சதவிகிதம் இருப்பதாய்ச் சொல்லும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொண்ட போது !  சகோதரனுக்கு விபத்தொன்று நடந்த பின்னே வேண்டிய இரத்தம் எவனோ இன்னொரு ஜாதிக்காரன் தந்த பிறகுதான் எனக்குள் முகிழ்த்தது அட மானிடா! எண்ணத்தில் நீ வெறும் மலடென்று !  - Divya Dharshini

No comments: