Wednesday, August 24, 2011

ஹசாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்....

மாணவர்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்...
மாணவர்களே ஒன்று சேருங்கள் ..
ஹசாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்....

லோக்பால் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு ஆணையம், ஊழல்வாதிகளை புகார் எழுந்த இரண்டே ஆண்டுகளில் தண்டிக்க முடியும். அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்த தனித்து இயங்கக்கூடியது.

தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் நாட்டின் கஜானாவிற்கே கொண்டு வரக்கூடியது. இதனால் ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுக்ள ஆகியும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்ப்பட வில்லை. அரதசியல்வாதிகள் அனைவரும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சிறிய அளவில் ஊழல் செய்பவர் ஜெயிலிலும், கோடிக்கணக் கில் ஊழல் செய்பவர் ஏ.சி. உள்பட சகல வசதி கொண்ட நிலையிலும் உள்ளனர். ஜனநாயக நாட்டில் ஊழல் மலிந்து விட்டது. இதற்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையான தாகும். ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டம் தேவை.
அன்னாஹசாரேவின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது கண்டனத்துக்குரியதாகும்.

மக்களும் , மாணவர்களும் இரண்டாம் சுதந்திர போராட்டதிற்கு தயார் ஆக வெண்டிய தருண்ம் இது .

ஊழல் செய்யும் போது அவர்களுக்கு சட்டத்தை மீறியதாகத் தோன்றவில்லை.
இப்பொழுது ஹசாரே சட்டத்தை மீறி விட்டதாகப் பேசுகிறார்கள்.
சத்தியமாக நாட்டை ஆள்வது காட்டுமிராண்டிகள் தான்.
அவரை கைது செய்ததன் மூலம் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் மேலும் எழுச்சி பெறவேண்டும் .

ஊழலுக்கு எதிராக ஒரு புரட்சி வெடிக்க வேண்டும்......!

No comments: