Sunday, May 1, 2011

பூவுக்குள்








''பூவுக்குள்'' இது ஒரு மிகச் சிறிய குறும்படம். [1minute]
ஒரு சிறுமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்லாது, உண்மைச் சம்பவத்தையும் உள்ளடக்கியது.

சுனாமியினால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த ஒரு சிறுமியின் வலியையும், எமது இனம் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமானவர்களையும் தெளிவாக சுட்டிக்காட்டும் படம்.

இப்படத்தில் தன் குடும்பத்தை பறித்தெடுத்த கடலையே மன்னிக்க மறுக்கும் பிஞ்சு உள்ளம், ஆனால் தெரிந்தே எம் உறவுகளை கொன்றொழித்த சிங்களத்தோடு, சேர்ந்தியங்க நினைப்பவர்களுக்கு செருப்படியாகும்.

சுனாமியினால் சுருண்ட எமது மக்களை சுதாரிக்க விடாமல் உலக வல்லாதிக்க சக்திகளோடு இணைந்து எமது இனத்தை அழித்ததையும் தெளிவாக்கும் படம்.

சுனாமி விட்டுச்சென்ற பூக்களையும் சுட்டுக் கொன்றவனையும் இனம் காட்டும் படமாக இது அமைந்துள்ளது

No comments: