Thursday, June 30, 2011

சுவிசர்லாந்து ஒரு கண்ணோட்டம் ...


இது ஒரு ஐரோபிய கண்டத்தை சேர்ந்த மிகச்சிறிய நாடு..

வெறும் 41,285 கிமீ பரப்பளவு கொண்ட தேசம்..இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன் மக்கள் தொகை 2009 இல் வெறும் 7,785,600  மட்டுமே.இதன் படி சராசரி மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 240 பேர் (622/சதுர மைல்) என உள்ளது.இருப்பினும், இதன் மலைசார்ந்த தெற்குப் பகுதியின் பெரும்பகுதி, சராசரியை விடக் குறைவான மக்கள் அடத்தியையே கொண்டுள்ளது, மாறாக வடக்குப் பகுதியிலும் இறுதித் தென்பகுதியிலும் ஓரளவு அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது, அவை அதிகமான மலைசார்ந்த நிலைப்பகுதியையும், பகுதியளவு காடுகளையும் நிலப்பரப்புகளையும், அதேபோன்று சில பெரிய ஏரிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்


இதை landlocked country என்று அழைக்கிறார்கள். அதாவது எந்த பக்கமுமே கடல் கிடையாது..
இந்த நாடு எந்த உலப்போரிலோ அல்லது வேறு சண்டைகளிலோ கலந்துகொண்டது கிடையாது.. அதாவது சண்டையில் தோக்குற சாதியும் இல்லை, ஜெயிக்கிற சாதியும் இல்லை..


நாடுமுழுவதும் விவசாய நிலங்கள் இருந்தாலும் , யாரும் விவசாயத்தை விரும்பமாட்டார்கள் ...
ரசாயனம், உடல்நலம் மற்றும் மருந்துகள் துறை, அளவிடல் கருவிகள், இசைக் கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்துறைகள் ஆகும்.
இங்கே வேலையின்மை என்பது இங்கே மிகக்குறைவு...

அங்கு 220 வங்கிகள் உள்ளன .கவனீங்க மக்களே 110 கோடி மக்கள் தொகைகொண்டுள்ள நமது நாட்டில் 101 வங்கிகள் மட்டுமே உள்ளன..
எதற்க்காக என்பது உங்களுக்கே புரிந்திக்கும்..

அந்தவங்களில் நமது கருப்பு பணமுதலைகள் போடும் பணத்திற்கு பெரும்பாலும் வட்டியெல்லாம் கிடையாது..பாதுகாப்பு, ரகசியத்தன்மை , எந்த இடத்திலிருந்தும்  எடுத்துகொள்ளும் வசதி இவைகளை மட்டுமே அந்த வங்கிகள் எப்போதும் வழங்குகின்றன .. இதற்க்கு அந்த நாட்டின் சட்ட விதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..

இவ்வாறு deposit செய்யப்படும் பணங்களை அந்த நாடு பல்வேறு துறைகளில் சுலபமாக முதலீடு செய்கின்றன ..பெரும்பாலும் அந்த நாடு பணத்தேவைக்காக உலக வங்கியை நாடுவதில்லை ...
இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு, பொருளாதாரம்,வேலைவாய்ப்பு போன்றவைகளில் முன்னேரிகொன்டிருக்கிறது..

இவையெல்லாம் யாருடைய பணமென்று உங்களுக்கு புரிகிறதா?
அத்தனையும் நம் நாட்டிலிருந்து செல்லும் கருப்பு பணம் மட்டுமே ..

இது எப்படி இருக்கிறதென்றால் நாம் கஷ்ட்டப்பட்டு,வேர்வை சிந்தி உழைத்து அவனுக்கு கொடுக்கிறோம்...அவன் சும்மா உக்கார்ந்து கொண்டே வருகிற பணத்தை வைத்துகொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுகிறான்...
இதுக்குபேருதான் நோகாம நொங்கு திங்கிறது...

நம்மை முட்டாளாக்க இப்போது இரட்டை வரி விதிப்பு என்ற சட்டத்தை மத்திய அரசு  கொண்டுவந்துள்ளது..

இந்தியாவை  குறைத்து மதிப்பிடவேண்டாம் .. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு..இப்போது மிகப்பெரிய நிறுவனங்களின் குறிக்கோளே , இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன ..இனிவரும் காலங்களில் இந்தியாவின் துணை இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது...

அப்படி இருக்கும்போது இந்த கருப்பு பணத்தை கொண்டு வரவும், இந்தியாவிலிருந்து கருப்பு பணம் செல்லாமலும் தடுக்க நிச்சயமாக முடியும்.. அது நம்நாட்டை ஆள்பவர் கையில் உள்ளது...
அவர்களை தேர்ந்தெடுக்கும் எஜமானரே நீங்கள் தான் ...

மக்களே நீங்க யோசிப்பிங்கன்னு நினைக்கிறேன்...
இதை நாலுபேருக்கு சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன்..
JAI HIND

Friday, June 24, 2011

வான்மீகியின் வரலாறு


வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்த்து, “நீ ஏன் திருடுகிறாய். இது, பாவம் இல்லையா?” என்றார் நாரதர். ‘என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்’ என்றான் அவன். ‘உன் பணத்தில் பங்கு பெறுபவர்கள், நீ செய்யும் பாவத்திலும் பங்கேற்பார்களா என்று கேட்டு வா’ என்றார் நாரதர். அவன் முதலில் பெற்றோரிடம் சென்றான். ‘வழிப்பறியில்தான் நம் வாழ்க்கை நடக்கிறது. அடுத்தவர் பொருளைக் கையாடும் எனது பாவத்தில், உங்களுக்குப் பங்கில்லையா?’ என்றான். ‘பாவி மகனே, நீ செய்யும் ஈனத் தொழிலை இதுநாள் வரை நாங்கள் அறியவில்லையே. உனது பாவத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?’ என்று கோபத்தில் கத்தினர்.
வருத்தத்துடன் அவன் மனைவியிடம் சென்று நடந்ததை விளக்கினான். ‘கைப்பிடித்த பெண்ணுக்குக் காலம் முழுவதும் வாழ்வளிப்பது கணவனது கடமை. நீ தவறான வழியில் பொருள் ஈட்டினால், அந்தப் பாவத்தில் நான் எப்படிப் பங்கேற்க முடியும்?’ என்றாள் மனைவி. நாரதரிடம் திரும்பியவன், ‘இனி, நான் என்ன செய்தால் நல்லது?’ என்று வழி கேட்டான். ‘உனது பணத்தைப் பங்கு பிரித்தவர்கள், நீ செய்த பாவத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அவர்களது அன்பு சுயநலமானது. எனவே, பாவத் தொழிலை விட்டுவிடு. இறைவனை இதயத்தில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடு. உன் மனம் மாசுகளிலிருந்து விடுபடும்’ என்றார் நாரதர். அப்படியே செய்தான் திருடன்.
வருடங்கள் வளர்ந்தன. தியானத்தில் இருந்தவனைப் புற்று மூடியது. வானத்திலிருந்து ‘முனிவரே எழுந்திடும்’ என்று அசரீரி கேட்டது. ‘கள்வனாகிய நானா முனிவன்?’ என்றான் அவன். ‘தியானம் உனது மாசகற்றி, முனிவனாக மாற்றிவிட்டது. புற்றிலிருந்து எழுந்து வந்ததால் இனி நீ ‘வான்மீகி’ என்று அழைக்கப்படுவாய்’ என்றது அசரீரி. ராமாயணம் தந்த வான்மீகியின் வரலாறுதான் இது.

Thursday, June 23, 2011

ஒரு மருத்துவ அதிசயம்! எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு ?


“பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்!
கூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு” என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!
“மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்!
சிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது!!
டைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே!!

'பச்சைப் புரட்சி'க்கு விதை போட்ட விக்ரம்


நடிகர் விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக்குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியது :

" ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

எனவே 'பச்சைப்புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்.

இத்திட்டத்திற்காக எனது நண்பர்களான விஜய், அஜீத் என பலரிடம் பேச இருக்கிறேன். அது மட்டுமல்லாது இனி எனது படங்களில்  இது சம்பந்தமான விளம்பரங்களும் இடம்பெறும்.

விஜய், அஜீத்துடன் இணைந்து இது சம்பந்தமாக ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்ய திட்டமும் இருக்கிறது."

சமூக நலப்பணிகளில் எல்லாம் ஈடுபடுகீறர்களே அரசியலுக்கு அஸ்திவாராமா என்ற கேள்விக்கு " எதுவும் நடக்கலாம். ஆனால் நான் அரசியலுக்கு வருவது கஷ்டம்.. ஏனென்றால் எனக்கு பேச வராது "  என்ற பதிலளித்தார்.

நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரென்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரென்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.

Sunday, June 19, 2011

பாரதம் உருவானது, பலர் வேர்வையால்..............


 நவபாரதம் உருவானது, பலர் வேர்வையால் சுகம்  காணுது,
முதல் ஊழலோ 1948 ல் வி.கே.கிருஷ்ணமேனன் ‘ஜீப்’ ஆனது
மறு ஊழலோ 1957இல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராகப்
பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியால் தனி நிறுவனங்களின்
பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்தது .
விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பை வகித்த காலத்தில் 1980இல் மராட்டிய மாநில முதல்வராக அப்துல் ரகுமான் அந்துலே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பொறுப்பு வகித்தார். ஏ.ஆர். அந்துலே தொடங்கிய ‘இந்திராகாந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ உட்பட பல அறக்கட்டளைகளுக்கு நிதி கொடுத்தவர்களுக்கு மட்டும் சிமெண்ட் ஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்தார் என்று புகார் எழுந்தது. அந்துலேவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் திருமதி மிருணாள் கோரே, திருமதி கே.தேசாய், பி.பி.சாமந்த் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.லென்டின், ‘அறக்கட்டளைக்கு நன்கொடை’ என்ற பெயரில் கட்டட நிறுவனங்களிடமிருந்து அந்துலே இலஞ்சம் பெற்றார் என்று, 1982ஆம் ஆண்டு ஜனவரி 12இல் தீர்ப்பளித்தார். இதனால், ஏ.ஆர்.அந்துலே முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி பிரதமர் பதவியிலிருந்த போது 1986ஆம் ஆண்டு மார்ச்சு 24இல், சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 155 மி.மீட்டர் பீரங்கிகளை வாங்கிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சுவீடன் வானொலி, மூலம் “இந்தியாவில் பீரங்கி விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் வழங்கி உள்ளது” என்று பரபரப்பான செய்தி வெளியானது. ராஜீவ்காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் எழுந்து, நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி மூலம் பீரங்கிபேர கமிஷன் தொகை ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் ‘உளவு அறிந்து’ செய்தி வெளியிட்டன.
இந்திய மக்களை அதிரவைத்த பீரங்கி பேர ஊழலால் 1989இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது.
\பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஊழல்கள், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய ஊழல் அத்தியாயங்களைத் தொடர்ந்ததற்கு சான்றுகளாகத் திகழ்ந்தன. இலண்டன் ஊறுகாய் தொழிலில் பிரசித்த பெற்ற லக்குபாய் பதக், இந்தியாவில் காகிதக் கூழ் காண்ட்ராக்ட் பெறுவதற்காக நரசிம்மராவுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று புகார் கூறப்பட்டது. ஊறுகாய் வியாபாரி தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்பதால் நரசிம்மராவ், மோசடி சாமியார் சந்திராசாமி, அவரது உதவியாளர் அகர்வால் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.
நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவையே உலுக்கிய இன்னொரு புகழ் பெற்ற ஊழல், ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழலும் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.
இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.
அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.
பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.
முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.
மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.
ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.
நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.
ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி.
மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறையைக் கேட்டுப் (மிரட்டி!) பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பம் இந்த மெகா ஊழலில் துணிகரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரி ஆ.ராசாவை கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, கோபாலபுரம் கொள்ளைக் கும்பல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற ஊழல்களிலேயே இந்த ‘மெகா’ ஊழல் எப்படி திட்டம் போட்டு கச்சிதமாக, திருடப்பட்டுள்ளது


Saturday, June 18, 2011


விடுதலை பெற்ற இந்தியாவின் 60 ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத்தையும், நாட்டையும் உலுக்கிய ஊழல் விவகாரங்கள் ஏராளம். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக அம்பலத்திற்கு வந்த மிகப்பெரிய ஊழல், 1948இல் காஷ்மீர் யுத்தம் நடைபெற்றபோது, இராணுவத்திற்கு பிரிட்டனில் இருந்து ஜீப் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல்தான். பிரிட்டனில் இந்தியத் தூதுவராகவும் பின்னர் மத்திய இராணுவ அமைச்சராகவும் பதவி வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
1957இல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்த பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் அவரை பதவி நீக்கம் செய்திடுமாறு எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்ப் பட்டியலை அளித்தனர். பிரதமர் நேரு நடவடிக்கை எடுக்கத் தயங்கியபோது உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பிரதாப் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசு மீது கண்டனம் தெரிவித்தது. அதன் பின்னர் கெய்ரோன் மீது விசாரணை நடத்திட 1963, ஜூலையில் நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் அவர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் கெய்ரோன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பை வகித்த காலத்தில் 1980இல் மராட்டிய மாநில முதல்வராக அப்துல் ரகுமான் அந்துலே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பொறுப்பு வகித்தார். ஏ.ஆர். அந்துலே தொடங்கிய ‘இந்திராகாந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ உட்பட பல அறக்கட்டளைகளுக்கு நிதி கொடுத்தவர்களுக்கு மட்டும் சிமெண்ட் ஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்தார் என்று புகார் எழுந்தது. அந்துலேவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் திருமதி மிருணாள் கோரே, திருமதி கே.தேசாய், பி.பி.சாமந்த் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.லென்டின், ‘அறக்கட்டளைக்கு நன்கொடை’ என்ற பெயரில் கட்டட நிறுவனங்களிடமிருந்து அந்துலே இலஞ்சம் பெற்றார் என்று, 1982ஆம் ஆண்டு ஜனவரி 12இல் தீர்ப்பளித்தார். இதனால், ஏ.ஆர்.அந்துலே முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ராஜீவ்காந்தி பிரதமர் பதவியிலிருந்த போது 1986ஆம் ஆண்டு மார்ச்சு 24இல், சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 155 மி.மீட்டர் பீரங்கிகளை வாங்கிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சுவீடன் வானொலி, மூலம் “இந்தியாவில் பீரங்கி விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் வழங்கி உள்ளது” என்று பரபரப்பான செய்தி வெளியானது. ராஜீவ்காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் எழுந்து, நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி மூலம் பீரங்கிபேர கமிஷன் தொகை ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் ‘உளவு அறிந்து’ செய்தி வெளியிட்டன.
இந்திய மக்களை அதிரவைத்த பீரங்கி பேர ஊழலால் 1989இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஊழல்கள், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய ஊழல் அத்தியாயங்களைத் தொடர்ந்ததற்கு சான்றுகளாகத் திகழ்ந்தன. இலண்டன் ஊறுகாய் தொழிலில் பிரசித்த பெற்ற லக்குபாய் பதக், இந்தியாவில் காகிதக் கூழ் காண்ட்ராக்ட் பெறுவதற்காக நரசிம்மராவுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று புகார் கூறப்பட்டது. ஊறுகாய் வியாபாரி தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்பதால் நரசிம்மராவ், மோசடி சாமியார் சந்திராசாமி, அவரது உதவியாளர் அகர்வால் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.
நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவையே உலுக்கிய இன்னொரு புகழ் பெற்ற ஊழல், ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழலும் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.
இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.
அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.
பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.
முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.
மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.
ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.
நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.
ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி.
மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறையைக் கேட்டுப் (மிரட்டி!) பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பம் இந்த மெகா ஊழலில் துணிகரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரி ஆ.ராசாவை கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, கோபாலபுரம் கொள்ளைக் கும்பல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற ஊழல்களிலேயே இந்த ‘மெகா’ ஊழல் எப்படி திட்டம் போட்டு கச்சிதமாக, திருடப்பட்டுள்ளது என்ற விபரங்களைப் பார்ப்போம்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியால், வளர்ச்சி பெற்றுள்ள தொலைத் தொடர்புத் துறை மூலம் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பு தொலைபேசிகள், கட்டுப்பாட்டு அறையிலிருந்து நுகர்வோர் இடம் வரை கேபிள்கள் போடப்பட்டு, அதன் மூலம் இயக்கப்பட்டன. பிறகு கம்பி இல்லாத் தந்தி போல, கேபிள்கள் இல்லாமலே ( Wireless Telephony ) தொலைபேசி சேவை நடைமுறைக்கு வந்தது.
தற்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அலைபேசிகள் ( Mobile Phones ) வந்துவிட்டன. தகவல்கள், மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு ( Electromagnetic Waves ) அவை கடத்திகள் ( Transmitter ) மூலம் அனுப்பப்படுகின்றன. மின்காந்த அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் கருவிகளை ( Receiver ) பயன்படுத்தி அலைபேசிகளுக்கு ( Cell Phones ) தகவல்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு தகவல் தொடர்புகளுக்குப் பயன்படும் மின்காந்த அலைகளின் தொகுப்புகளுக்கு அலைக் கற்றைகள் ( Spectrum ) என்று பெயர்.
செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்கு பயன்படும் இந்த “அலைக்கற்றைகள்’ (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
செல்போன் சேவைக்காக ‘ஸ்பெக்ட்ரம்’ தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டுக்காக அந்நிறுவனங்கள் அரசுக்கு உரிமம் கட்டணம் ( License Fee ) செலுத்த வேண்டும். இவ்வாறு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்ததில்தான் ‘பெரும் ஊழல்’ நடைபெற்று இருக்கின்றது.
இரண்டாவது தலைமுறை அலைவரிசையை ( 2G Second Generation Wireless Telephony ) தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில்தான் இந்திய அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை, ‘2G ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்வதற்கு பொது ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், முதலில் வருபவருக்கு முன் உரிமை என்ற ‘விசித்திரமான’ அடிப்படையில் வர்த்தகம் செய்துள்ளது.
மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக, கருணாநிதியால் நியமிக்கப்பட்ட (அய்யோ பாவம்! பிரதமர் மன்மோகன்சிங்! அரசியல் சட்டம் பிரதமருக்குத்தான் தன் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? என்று தீர்மானிக்கும் உரிமையைத் தந்திருக்கின்றது. கூட்டணி வியாபாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி குடும்பம், பிரதமரின் உரிமையையே தட்டிப் பறித்துவிட்டது) ஆ.ராசா, 2G அலைவரிசைகளை இரண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்.
ஒன்று, ஸ்வான் ( Swan Telecom ) மற்றொரு நிறுவனம் யூனிடெக் ( Unitech ) இந்த இரு நிறுவனங் களுக்கும் ‘2G அலைவரிசைகள்’ முதலில் வந்தவர்களுக்கு முன் உரிமை என்ற அடிப்படையில், 2001ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் உரிமம் கட்டணம் பெற்றுக் கொண்டு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்வான் நிறுவனம் ‘2G ஸ்பெக்ட்ரம்’ உரிமத்தை ரூ.1,537 கோடிக்கு வாங்கியது. அதேபோல யூனிடெக் நிறுவனம் ரூ. 1,651 கோடிக்கு வாங்கி உள்ளது. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளுக்கும் யூனிடெக் நிறுவனம் 23 பகுதிகளுக்கும் ‘செல்போன் சேவை’ வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றன.
2G அலைவரிசை கட்டணமாக ரூ.1,537 கோடி அரசுக்கு செலுத்திய ஸ்வான் நிறுவனம், ஒரே ஒரு பைசா கூட செலவழித்து, மக்களுக்கு செல்போன் சேவையைத் தொடங்கவில்லை. மாறாக ஸ்வான், தனது 45% பங்குகளை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ( UAE ) எடிசலாட் ( Etisalat ) என்ற நிறுவனத்திற்கு ரூ. 4,500 கோடிக்கு விற்பனை செய்து விட்டது.
இதுபோன்றே யூனிடெக் நிறுவனமும் ஒரு பைசா கூட செலவழிக்காமல், தனது 60% பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் ( Telenor ) என்ற நிறுவனத்துக்கு ரூ.6,120 கோடிக்கு விற்றுவிட்டது.
மத்தியத் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், அரசுக்கு செலுத்தியது வெறும் ரூ 1,537 கோடி; ஸ்வான் தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ 2,963 கோடி லாபம் அடைந்து இருக்கின்றது.
யூனிடெக் நிறுவனம் செலுத்திய உரிமம் கட்டணம் ரூ 1,651 கோடி; தனது பங்குகளை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் யூனிடெக் பெற்றுள்ள லாபம் ரூ 4,469 கோடி;
ஸ்வான், யூனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தொலைத் தொடர்புத்துறை சேவையில் அனுபவம் இல்லாதவை. இரண்டுமே ‘உப்புமா’ கம்பெனிகள்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ள கம்பெனிகள்; இவை எவ்வாறு அலைவரிசை உரிமம் பெற்றன? எந்த அனுபவத்தைக் கொண்டு தொலைத்தொடர்புத்துறை இந்த நிறுவனங்களுக்கு ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்தது? ஒரே ஒரு பைசாகூட செலவிடாமல், இரண்டு ‘உப்புமா’ கம்பெனிகளும் தொலைத் தொடர்புத் துறையைப் பயன்படுத்திக் கொண்டு ‘அலைவரிசை’ ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.
வெறும் ‘லெட்டர் பேடை’ மட்டும் வைத்துக்கொண்டு, உரிமம் பெற்றுக் கொண்டு, அதை மாற்றிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே ‘தாள் பரிமாற்றத்தின்’ மூலம் ஸ்வான் ரூ 2,963 கோடியும், யூனிடெக் ரூ 4,469 கோடியும் கொள்ளை அடித்து இருக்கின்றன.
இந்திய அரசுக்கு சொற்பத் தொகையினை உரிமம் கட்டணமாகச் செலுத்திவிட்டு,
கோடான கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கும் துணிகர செயலில் இந்த நிறுவனங்கள் ஈடுபட முடிந்தது எனில் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களை நடத்துவது யார்?
இந்த ‘உப்புமா’ கம்பெனிகளின் பங்குதாரர்கள் யார்?
பொது ஏல முறையில் ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஏன்?
2008 ஆம் ஆண்டு சந்தைவிலையைக் கணக்கில் கொள்ளாமல், 2001 ஆம் ஆண்டு விலையில் சொற்பத் தொகைக்கு 2G அலைவரிசை வர்த்தகம் செய்தது ஏன்?
உரிமம் பெற்ற நிறுவனங்கள், தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபடாத நிறுவனங்கள் என்று தெரிந்தே ‘அலைக்கற்றை’ ஒதுக்கீடு செய்தது ஏன்?
இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் செல்போன் சேவையைத் தொடங்காமலேயே, வெறும் தாள் மூலம், பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கொள்ளை அடித்துள்ளதை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கண்டு கொள்ளாதது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
விசுவரூபம் எடுக்கும் வினாக்கணைகளுக்கு மத்திய அமைச்சர் ராசா என்ன பதில் அளிக்கிறார்?
முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய் ( Telecom Regulatory Authority of India -TRAI ) பரிந்துரையின் பேரில்தான், அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக அமைச்சர் ராசா கூறி உள்ளார்.
ஆனால், இதனை ‘டிராய்’ தலைவர் என்.மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ள கருத்துகள் பின்வருமாறு;
“2007 இல் ‘டிராய்’ செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.
தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007, அக்டோபர் 19 மற்றும் 2008, ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரபூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக் காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்குகள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை;
மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இப்படித்தான் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன”
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள முரண்பாடான பதில்கள் அம்பலம் ஆகி உள்ளன.
‘டிராய்’ தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன், இப்பொழுது அமைச்சர் கூறுகிறார், “பிரதமர் அனுமதியுடன்தான் ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்யப் பட்டது” என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று, அமைச்சர் ராசா மன்மோகன் சிங்கை துணைக்கு அழைத்து உள்ளார்.
ஆனால், இதுவரை பிரதமர் இந்தப் பிரச்சனை குறித்து வாய்திறக்காதது ஏன்?
சம்பந்தப்பட்ட பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், தொலைத் தொடர்புத் துறையை, கேட்டுப் பெற்ற கருணாநிதி தனக்கே உரிய வஞ்சகமான முறையில் ராசாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை கேபினட் அமைச்சராக ஒரு தாழ்த்தப்பட்டவர் பதவியில் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ராசா மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று, கருணாநிதி திசை திருப்புகிறார்.
அனைத்து எதிர்க்கட்சிகளுமே ராசா மீது இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இரு கடிதங்களைப் பிரதமருக்கு எழுதி உள்ளார். அதில், “ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போன்று பல்வேறு கம்பெனிகளும் சொற்ப தொகையை அரசுக்கு செலுத்திவிட்டு உரிமம் பெற்று இருப்பதால், இந்திய அரசுக்கு ரூ 60,000 (அறுபது ஆயிரம்) கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளதாக” சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
இந்த ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் கோரி உள்ளன.

Wednesday, June 15, 2011

மாவீரன் அலெக்சாண்டரின் இறுதி நிமிடங்களும், கடைசி மூன்று ஆசைகளும்


உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று கிளம்பியவன் ... மாவீரன் அலெக்சாண்டர்.
கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அவனுக்கு குருவாக இருந்தார்.. தான் கலந்து கொண்ட எந்த போரிலும் தோல்வியே அடையாத வீரன்.

உலகையே தான் காலடியில் கிடத்திய மாவீரனின் இறுதி கட்டத்தில் ,  அவனது கடைசி சில விருப்பங்கள் என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்ததை , உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தேவையான பாடங்கள் அவை.
=====================

பல போர்க்களங்களில் ஈடுபட்டு , உடல் தளர்ந்து  விரக்தியில் சொந்த நாடு திரும்பிக் கொண்டு இருந்தான். மரணப் படுக்கை. இனி உயிர் பிழைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. சுற்றிலும் அவனது படைத் தளபதிகள் , வைத்தியர்கள்.. சோகத்தில் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சாகும் முன் தன் தாயின் முகத்தை  கடைசியாக ஒரே ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டான்.. அது நிராசை என்று அவனுக்கும் தெரிந்து இருந்தது.
தனது உயிரின் எஞ்சி இருந்த கடைசி சக்தியை திரட்டி பேச ஆரம்பித்தான்....

அருகில் இருந்த முக்கிய தளபதியைப் பார்த்து, " நண்பா!  எனக்கு மூன்று கடைசி ஆசைகள்.. நிறைவேற்றித் தருவாயா?"
" சொல்லுங்கள், சக்கரவர்த்தி".
" முதலாவதாக , நான் இறந்த பிறகு, என் சவப் பெட்டியை , எனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் மட்டுமே தூக்கி செல்ல வேண்டும்... ..

இரண்டாவதாக  என்னுடைய சவ ஊர்வலம் செல்லும் போது , நான் இதுவரை வெற்றி கண்டபோது , கவர்ந்த தங்க , வைர நகைகளை வழி தோறும்  சுடுகாடு வரையிலும் , தரையில் கீழே போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்

மூன்றாவதாக , சவப் பெட்டிக்கு வெளியே  என் கைகள் இரண்டும் தெரியும் படி,   என்னை மண்ணில்  புதையுங்கள்"..
அங்கு இருந்த அனைவரும் கண்டிப்பாக நிறை வேற்றுவோம் என்று ஒரே குரலில் உறுதி கூறினார்கள்... அனைவருக்கும் ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவில்லை..

அருகில் இருந்த பிரதான தளபதி  அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் , " மா மன்னா ! என் இப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? " என்று கேட்டான்.

வெளிறிப் போன முகத்துடன் , வறண்டு போன நாவைத் தடவியபடியே  அந்த மாவீரன் பேசினான்." ஒன்னும் இல்லை, நண்பா, எனக்கு வாழ்க்கை இப்போ தான் கத்துக் கொடுத்த பாடங்கள் அவை. நாளைக்கு உலகத்திலே உள்ளவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்."

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குது.. உடம்பு புரட்டி போடுது.. எல்லார் கண்ணிலும் கண்ணீர்.

" என்கிட்டே உலகத்திலேயே  தலை சிறந்த மருத்துவர்கள் இருக்கிறாங்க.. ஆனா, பாரு , போகப் போற உயிரை , யாரும் தடுக்க  முடியலை. நான் எவ்வளவோ சம்பாதிச்சேன். கொள்ளை அடிச்சேன்., ஆனா மண்ணில் புதைக்கிறப்போ , அதிலே இருந்து ஒரு துளி கூட நம்ம கூட வரப் போறது இல்லே.எல்லாம் மண்ணிலே தான்...  நான் எவ்வளவோ பேராசையில் இருந்தேன்.. என்ன வேணுமோ அனுபவிச்சேன். எல்லா செல்வங்களும் இருந்தது... கடைசிலே, நான் எதையும் கையிலே கொண்டு போகலை.. என் கையை பார்த்துக்கோ..வெறும் கையோட வந்தேன், வெறும் கையோட தான் போறேன். "

இதிலே இருந்து நமக்கு என்ன தெரியுது ?:

" உன் கிட்ட என்னதான் வசதி இருந்தாலும், சக்தி இருந்தாலும், மருத்துவம் பார்க்கிற வசதி இருந்தாலும் , விதினு ஒன்னு வந்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது.... உடம்பை ஒழுங்கா பார்த்துக்கிறவங்களுக்கே இந்த கதி... நம்ம உடம்பைக் கூட பார்த்துக்காம , சொத்து , சுகம் னு தேடி , எதைக் கொண்டு போகப்போறோம்  ..? நம்மள்ள எத்தனை பேரு, நமக்காக , நம்ம குடும்பத்துக்காக நேரத்தை செலவழிக்கிறோம்..?
செய்யிற வேலை இல்லை சொந்த பிசினெஸ் , இதையே காரணம் காட்டி , அதுக்குள்ளேயே மூழ்கி, என்ன பண்றோம் னே தெரியாம, திடீர்னு வயசு ஆகி... மேலே போகப்போறோம்..  நாம கடைசிலே கொண்டு போகப்போறதும் ஒன்னும் இல்லே.. இருக்கிறவரைக்கும் , நாமும் நம்ம குடும்பமும் சந்தோசமா இருப்போம்.. நமக்கு மிஞ்சியதை , முடியாதவங்களுக்கு , நம்மாலே முடிஞ்சவரை உதவி செய்வோம்...
வாழ்க்கையிலே இருந்து நாம என்ன கத்துக்கிறோம் னு புரிஞ்சு , நல்ல விதமா வாழ்க்கையை மாத்துவோம்..
சம்பாதிக்கிறதுலே ஒரு பகுதியை, முடியாத ஏழைகளுக்கு , முதியவர்களுக்கு கொடுத்து உதவுங்க.. உங்களை பெத்தவங்களை நேசியுங்க... அவங்க மனசு வாழ்த்த , வாழ்த்த , உங்களுக்கு நல்ல வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

பெத்த புள்ளைங்க உயிரோட இருக்கிறப்போ, அனாதையா  முதியோர் இல்லத்துலே சேர்க்கிற கொடுமை இனிமேலாவது ஒழியட்டும்...

முடிஞ்சவரை , ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்க உடல் நலத்துக்காக செலவழியுங்க.. அது உடற் பயிற்சியாக இருக்கலாம். இல்லை "வாக்கிங்", "ரன்னிங்",  "யோகா" வா இருக்கலாம்..நம்மளை நாமே தான் பார்த்துக்கணும்.. உங்க குழந்தைகளுக்கும் கத்துக் குடுங்க.. ஒரு தலைமுறைக்கே வழி காட்டியா இருக்கும்..!!!

வாழ்க மானுடம்! வாழ்க மனித நேயம்..!

Tuesday, June 7, 2011

வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக் குணங்களை அறிவோம் !


* உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.


* சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.


* சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.


* பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.


* விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.


* சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.


* தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக்
கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.


* தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லை களைப் போக்குகிறது. இந்தியப் பெண்கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.


* காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப் போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


* கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.


* ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


* உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


***
நன்றி தினதந்தி.
***

Thursday, June 2, 2011

சயனோ குளுக்கோசைடுகள்


ஹைட்ரஜன் சயனைடு’ என்பது ஒரு கொடிய நஞ்சாகும். பல தாவரங்கள் அந்த விஷத்தைப் பயன்படுத்தி, தம்மைத் தின்ன வரும் பூச்சிகளை விரட்டிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தாவரங்களைப் பூச்சிகள் கடிக்கிறபோது செல்கள் சேதப்படுத்தப்படுகின்றன. அப்போது அத்தாவரங்கள், `சயனோ குளுக்கோசைடுகள்’ என்ற சேர்மங்களில் இருந்து சயனைடை உண்டாக்கி வெளிப்படுத்துகின்றன.

இந்தச் செயல்முறையில் தேவையானபோது மட்டும் சரியான தருணத்தில் நஞ்சு வெளியிடப்படுகிறது. இப்படி சுமார் ஆயிரம் வகையான தாவரங்கள் சயனைடு விஷத்தை வெளியிடுகின்றன. `காசாவா’ என்ற தாவரத்தில் சயனைடு விஷம் அதிகம். அதை உபயோகிப்பது ஆபத்தான விஷயம். யாரோ, பெரிய நாப்விட், வெள்ளை கிளாவர், பறவைக் கால் டிரபாயில் போன்ற தாவரங்கள் சயனைடை உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்கவை.


பறவைக் கால் டிரபாயில், எப்படி நத்தைகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். தாவரவியல் மற்றும் மரபியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன்ஸ், டாக்டர் ஸ்டீபன் காம்ப்டன் ஆகிய இரு ஆய்வாளர்கள் பூச்சிகளுக்கு சயனைடு இலைகளைத் தின்னக் கொடுத்துப் பரிசோதித்தார்கள். அதேபோல இருவகையான தாவரங்களின் பூவிதழ்களையும் தின்னக் கொடுத்தார்கள்.
 
சிலவகை வண்டுகள், நீல வண்ணத்துப்பூச்சியின் லார்வா புழு, ரம்ப ஈ போன்றவை சயனைடை பற்றி கவலைப்படாமல் அத்தகைய இலைகளைச் சாப்பிட்டு விடுகின்றன. சயனைடை தீங்கற்ற பொருளாக மாற்றிவிடக்கூடிய திறமை அவற்றுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. மூன்று வகை வெட்டுக்கிளிகள், இரண்டு வகை வண்டுகள், இயர்விங் என்ற பூச்சி, இரண்டு வகை நத்தைகள் ஆகியவை சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கின்றன. அவை பறவைக் கால் டிரபாயிலை ஒதுக்கி விடுகின்றன. சயனைடு அதிக அளவில் இருக்கும்போது கொடிய நஞ்சு.


ஆனால் டிரபாயில் செடி, தன்னைத் தின்ன வரும் பூச்சிகளைக் கொல்ல முனைவதில்லை. ஒரு எச்சரிக்கை கொடுத்து விரட்டிவிடவே சயனைடை அது பயன்படுத்துகிறது. வெட்டுக்கிளி ஒன்று ஒரு பூவில் போய் உட்கார்ந்த போது நடந்ததை ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள்.



அது தனது மீசைகளாலும், உணர்கொம்புகளாலும் பூவைப் பரிசீலித்துவிட்டு, சரி சாப்பிடலாமென்று ஒரு கடி கடித்தது. அப்போதுதான் பூவில் சயனைடு இருப்பதை அது உணர்ந்தது. உடனே சட்டென்று பின்வாங்கி தலையை ஆட்டியவாறு பூவை விட்டுப் போய்விட்டது.
 



Wednesday, June 1, 2011

தொழில் நுட்பம்


மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.

இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக, நோக்கியா இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் புதிய இலக்குகளில் வெற்றிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

ஒரு புதிய மொபைல் இயங்கு சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கிறது. தற்போது நோக்கியா போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிம்பியன் மற்றும் மீகோ படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1.எளிய வேகமான பயன்பாடு: பல அப்ளிகேஷன்கள் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குவதை நாம் அனுபவித்து வருகிறோம். இவை விட்ஜெட் (Widget) என அழைக்கப் படுகின்றன.

விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் உள்ள இந்த விட்ஜெட்டுகள், இன்ஸ்டால் செய்வதற்கும் இயக்குவதற்கும் எளிதானவை. இதனால் பயனாளர்கள் நிச்சயம் மற்றவற்றைக் காட்டிலும் இவற்றை அதிகம் விரும்புவார்கள்.

2. கேம்ஸ்: மொபைல் போனை விளையாட்டிற்கெனப் பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மொபைல் போன் அதிக உற்சாகம் தரும் சாதனமாக இருக்கும்.

3. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்: ஆபீஸ் அப்ளிகேஷன் எனக் கொண்டு வந்து, கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்புகளாகும்.

எனவே இன்றைய கம்ப்யூட்டராக மாறிவரும் ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் மொபைல் மூலம் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை அனைவரும் விரும்புவார்கள்.

மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் ஆகிய அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு, நோக்கியா போன்களில் இனி இடம் பிடிக்கும். டாகுமெண்ட்களைப் படிப்பதற்கும், தயாரிப்பதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவதற்கும் யார் தான் ஆபீஸ் அப்ளிகேஷனை வேண்டாம் என்று சொல்வார்கள்!

4. மியூசிக்: ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளைத் தருவதில் மைக்ரோசாப்ட் தரும் தொழில் நுட்ப வசதிகளை எல்லாரும் அறிந்திருக்கிறோம். எனவே இந்த வகையிலும் விண்டோஸ் மொபைல் முதல் இடத்தைப் பெறும்.

5. இமெயில் பயன்பாடு: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் சர்வர் மூலம் தங்கள் இமெயில் பரிமாற்றங்களை மேற்கொள்பவர் களுக்கு, விண்டோஸ் மொபைல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

6. இன்ஸ்டன்ட் மெசேஜ்: உடனடி செய்தி அனுப்பி பெறுதல், கான்பரன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் கை கொடுக்கும்.

7. உலக மொழிகள் பயன்பாடு: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாடு எளிதானதாக உள்ளது. இது தற்போது நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களுக்கும் நீட்டிக்கப்படும்.

8. இதர வசதிகள்: நோக்கியாவின் மேப்ஸ் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேப்பிங் சர்வீசஸ் பிரிவின் ஓர் அங்கமாக இருக்கும். இது பிங் சர்ச் இஞ்சினில் இணைக்கப்படும். நோக்கியா தன் மொபைல்போன் மூலம், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கட்டணம் செலுத்தும் நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகிறது.

இனி இதன் மூலம் விண்டோஸ் மொபைல் கட்டண வசதிகள் விற்பனை செய்யப்படுவது எளிதாகும். ஸ்மார்ட் போன்களுடன் மற்ற வகை போன்களைக் கணக்கிட்டால், தற்போது மற்ற வகை போன்களே அதிகம் புழக்கத்தில் உள்ளன.

உலக அளவில் சென்ற ஆண்டு இறுதியில் 48 கோடி ஸ்மார்ட் போன்களும், 330 கோடி மற்ற வகை போன்களும் இருந்தன. ஆனால் விண்டோஸ் போன்ற கூடுதல் வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையில், வரும் 2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மற்ற வகை போன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் மொபைல், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் சிஸ்டங்களுக்கு நல்ல போட்டியாக இருப்பதால், ஏற்கனவே எச்.டி.சி., சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.

இப்போது நோக்கியாவும் இந்த வரிசையில் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் மோட்டாரோலா நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றிகரமாகத் தொடரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங் களுக்கிடையே நடக்கும் பந்தயத்தில் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் மொபைல் 7 ஆகிய குதிரைகளே ஓடும். எது வெற்றி பெறுகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.