Wednesday, August 24, 2011

வைத்தியம்

இரத்த கொதிப்பு குணமாக
அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.
தீப்புண் ஆற
வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.
கண்வலி வராமல் தடுக்க
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி வராது.
தொண்டை கரகரப்பு தீர
பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
குடல்புண் குணமாக
மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
கால்பித்த வெடிப்பு
அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவி வர குணமாகும்.
பெரும்பாடு நீங்க
வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு கட்டுப்படுத்தும்.
ஆண்களுக்கு
முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.
பல்வலி கூச்சம், பல் ஆட்டம் குணமாக
துத்து இலை, அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.
இரத்தம் சுத்தமாக
தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்.




No comments: