Thursday, August 11, 2011

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
வசதிக்கேற்ப  மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
பூண்டு – 10 பல் (பொடியாக வெட்டவும்)
புளி – 50 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3, நீளமாக வெட்டவும்


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும். அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும். இந்த குழம்பு படுகாரமாக இருக்கும். கவுச்சி நாற்றம் இருக்காது.

குறிப்பு: இந்த குழம்புக்கு மூடியை நடுவில் திறக்கலாம். ஏன் என்றால் மிளகாய்த்தூள் எண்ணெயில் வதக்குவதால் பச்சைவாடை வராது. மீன், புளி கரைசலையும் ஒன்றாகத்தான் போட வேண்டும்.

No comments: