Sunday, September 25, 2011

தமிழில் பெயரிடுங்கள்



 தாய்மொழியை ஒதுக்கி வைத்து பிறநாட்டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொள நினைத்தல்

தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்.
வாய்மணக்கும் தமிழில் பெய ரிடுவதாலே
வாய்வெந்து போய்விடுமா ? இட்டால் என்ன ?
குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண் கட்கெல்லாம்
அன்னலென்றும் அன்றிலென்றும் அல்லி யென்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண் டிற்கெல்லாம்
மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின்
மின்னி யென்றும் பெயரிடலாம் தமிழரெல்லாம்
என்றுமுள செந்தமிழில் பெயரி டாமல்
இரவல் மொழிப் பெயரிடுதல் அடிமைத் தனம்.
 - உவமைக் கவிஞர் சுரதா

No comments: