Thursday, June 30, 2011

சுவிசர்லாந்து ஒரு கண்ணோட்டம் ...


இது ஒரு ஐரோபிய கண்டத்தை சேர்ந்த மிகச்சிறிய நாடு..

வெறும் 41,285 கிமீ பரப்பளவு கொண்ட தேசம்..இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன் மக்கள் தொகை 2009 இல் வெறும் 7,785,600  மட்டுமே.இதன் படி சராசரி மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 240 பேர் (622/சதுர மைல்) என உள்ளது.இருப்பினும், இதன் மலைசார்ந்த தெற்குப் பகுதியின் பெரும்பகுதி, சராசரியை விடக் குறைவான மக்கள் அடத்தியையே கொண்டுள்ளது, மாறாக வடக்குப் பகுதியிலும் இறுதித் தென்பகுதியிலும் ஓரளவு அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது, அவை அதிகமான மலைசார்ந்த நிலைப்பகுதியையும், பகுதியளவு காடுகளையும் நிலப்பரப்புகளையும், அதேபோன்று சில பெரிய ஏரிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்


இதை landlocked country என்று அழைக்கிறார்கள். அதாவது எந்த பக்கமுமே கடல் கிடையாது..
இந்த நாடு எந்த உலப்போரிலோ அல்லது வேறு சண்டைகளிலோ கலந்துகொண்டது கிடையாது.. அதாவது சண்டையில் தோக்குற சாதியும் இல்லை, ஜெயிக்கிற சாதியும் இல்லை..


நாடுமுழுவதும் விவசாய நிலங்கள் இருந்தாலும் , யாரும் விவசாயத்தை விரும்பமாட்டார்கள் ...
ரசாயனம், உடல்நலம் மற்றும் மருந்துகள் துறை, அளவிடல் கருவிகள், இசைக் கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்துறைகள் ஆகும்.
இங்கே வேலையின்மை என்பது இங்கே மிகக்குறைவு...

அங்கு 220 வங்கிகள் உள்ளன .கவனீங்க மக்களே 110 கோடி மக்கள் தொகைகொண்டுள்ள நமது நாட்டில் 101 வங்கிகள் மட்டுமே உள்ளன..
எதற்க்காக என்பது உங்களுக்கே புரிந்திக்கும்..

அந்தவங்களில் நமது கருப்பு பணமுதலைகள் போடும் பணத்திற்கு பெரும்பாலும் வட்டியெல்லாம் கிடையாது..பாதுகாப்பு, ரகசியத்தன்மை , எந்த இடத்திலிருந்தும்  எடுத்துகொள்ளும் வசதி இவைகளை மட்டுமே அந்த வங்கிகள் எப்போதும் வழங்குகின்றன .. இதற்க்கு அந்த நாட்டின் சட்ட விதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..

இவ்வாறு deposit செய்யப்படும் பணங்களை அந்த நாடு பல்வேறு துறைகளில் சுலபமாக முதலீடு செய்கின்றன ..பெரும்பாலும் அந்த நாடு பணத்தேவைக்காக உலக வங்கியை நாடுவதில்லை ...
இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு, பொருளாதாரம்,வேலைவாய்ப்பு போன்றவைகளில் முன்னேரிகொன்டிருக்கிறது..

இவையெல்லாம் யாருடைய பணமென்று உங்களுக்கு புரிகிறதா?
அத்தனையும் நம் நாட்டிலிருந்து செல்லும் கருப்பு பணம் மட்டுமே ..

இது எப்படி இருக்கிறதென்றால் நாம் கஷ்ட்டப்பட்டு,வேர்வை சிந்தி உழைத்து அவனுக்கு கொடுக்கிறோம்...அவன் சும்மா உக்கார்ந்து கொண்டே வருகிற பணத்தை வைத்துகொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுகிறான்...
இதுக்குபேருதான் நோகாம நொங்கு திங்கிறது...

நம்மை முட்டாளாக்க இப்போது இரட்டை வரி விதிப்பு என்ற சட்டத்தை மத்திய அரசு  கொண்டுவந்துள்ளது..

இந்தியாவை  குறைத்து மதிப்பிடவேண்டாம் .. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு..இப்போது மிகப்பெரிய நிறுவனங்களின் குறிக்கோளே , இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன ..இனிவரும் காலங்களில் இந்தியாவின் துணை இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது...

அப்படி இருக்கும்போது இந்த கருப்பு பணத்தை கொண்டு வரவும், இந்தியாவிலிருந்து கருப்பு பணம் செல்லாமலும் தடுக்க நிச்சயமாக முடியும்.. அது நம்நாட்டை ஆள்பவர் கையில் உள்ளது...
அவர்களை தேர்ந்தெடுக்கும் எஜமானரே நீங்கள் தான் ...

மக்களே நீங்க யோசிப்பிங்கன்னு நினைக்கிறேன்...
இதை நாலுபேருக்கு சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன்..
JAI HIND

No comments: