Monday, May 2, 2011

மானாட மயிலாட தமிழ்மானம் காத்தாட…

மானாட மயிலாட தமிழ்மானம் காத்தாட…
தமிழகத்திலிருந்து தமிழ் மறவன்...........

மானாட மயிலாட மேடையில் நீயாட தாயும் தந்தையும்
பாத்தாட பாக்கவந்த சனமெல்லாம் சேர்ந்தாட பிச்சைக்கு
வந்தபிச்சைக்காறன் பிரண்டுபிரண்டாட நான் வளர்த்த
-பச்சைக்கிளி பறந்து பறந்தாட வேலையற்றகூட்டங்கள்
வெளியிலிருந்தாட வெள்ளைக்காறனும் வந்தாட பந்தாட
என் தமிழ் திண்டுகிறதே சர்வேசா …………………………….!!

ஆணோடு பெண்ணாட பாவாடை பறந்தாட மேலாடை
தளர்ந்தாட கையோடுகைசேர்த்து கட்டிக்கொண்டாட
தீர்ப்பெழுதவந்ததுகள் தமிங்கிலம்பேசியாட
இடையிடையே விளம்பரங்கள் வந்தாட நமீதாவும்
வந்தாட விசிலடித்து விசர்க்கூட்டம் விழுந்தாட
காத்தாட கடலாட கட்டுமரமும் சேர்ந்தாட
செந்தமிழ் சிதைந்தாடுதே பரம்பொருளே!!!

கட்டாந்தரையில் படுத்தவன் படுத்திருந்தாட கிளட்டு
நரிகழும் கைதட்டியாட கருங்குரங்குக்கூட்டமும் வந்தாட
ஆணுருவம் கொண்ட ஆண்டியும் வந்தாட
என் சொல்வேன் என் தமிழே………………

வந்தவரை வண்க்கமெண்று கைகூப்பி நிண்ற பண்பாடே
பாழ்பட்டசமூகமுனை படுக்கவத்து மேலேறியாடுவது
எனக்குமட்டும் தெரிகிறது நெஞ்சு கனக்கிறது
கையேடு கைசேர்த்து காலோடு கால் பின்னியாடும் தன்
மகளை கைகொட்டி வேடிக்கைபாக்கும் கேவலத்தை
நான் என் செய்வேன் என் தாயே !!

எதிர்காலம் என்னாகும் ஆத்திரம் தாங்காமல் கருங்கடல்
பாய்ந்து வரும் சகிக்கமுடியாமல் சந்திரமண்டலம் கீழே விழும்
பொறுக்க முடியாமல் பூமித்தாய் புளந்திடுவாள்
பாழ்பட்ட நாகரீகம் நசுங்கிப்போகட்டும் சத்தியமாய்
நசுங்கட்டும் ……………….

No comments: